‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படத்தில் டி.ராஜேந்தர் பாடிய பாடலுக்கு ஒரே வாரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள்!

ஆர்.ஜே.விஜய் கதாநாயகனாகவும். அனுஷீலா கதாநாயகியாகவும் முக்கிய வேடங்களில் பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், கலக்கப் போவது யாரு பாலா, பவர்ஸ்டார் சீனிவாசன், நளினி உள்ளிட்டோரும் நடித்துள்ள படம் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே.’

இந்த படத்தில் விஜய் சங்கர் இசையில் படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் டி.ராஜேந்தர் பாடிய ‘கோலி சோடா ரம்மு கலந்து குடிக்கிறான்’ என்ற பாடல் கடந்த அக்டோபர் 6ம் தேதி வெளியானது. நடிகர் நட்டி தனது இணைய பக்கத்தில் இந்த பாடலை வெளியிட்டார்.

டி.ராஜேந்தர் தனக்கேயுரிய ஸ்டைலில் கலக்கலாக பாடியுள்ள இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியிலும் குறிப்பாக குழந்தைகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டி.ராஜேந்தர் குரலுடன், துள்ளலிசையும் கலந்த இந்த பாடல் வெளியான எழு நாட்களுக்குள் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

அதையடுத்து பாடலை எழுதியவரும் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளவருமான ஹேமசூர்யா பாடலை ரசித்து ஹிட்டாகியிருக்கிற அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இவர் கன்னடத்தில் மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். பிரபல கன்னட ஹீரோக்கள் உபேந்திரா, தர்ஷன், சுதீப், கணேஷ் உள்ளிட்டோர் நடித்த படங்களுக்கு கதையெழுதி வெற்றிகரமான படைப்புகளை தந்தவர். கன்னட படங்களில் பணியாற்றி னாலும் இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.

சென்னை, திருச்சி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

எ.வி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில், மனோரமா பாட்டியாகவும், பாண்டியராஜன் பேரனாகவும் அவர்களுடன் ஊர்வசி, சில்க் ஸ்மிதா, அனந்தராஜ் உள்ளிட்டோர் நடித்து 1980 காலகட்டத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற நகைச்சுவை திரைப்படம் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே.’

90கிட்ஸ்,2k கிட்ஸ் ரசிகர்களுக்கு அந்த நகைச்சுவை அனுபவத்தை மீண்டும் கொடுப்பதற்காக ஏவி எம் நிறுவனத்திடம் இருந்து டைட்டிலை அனுமதி வாங்கி. வின்னர் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட், மற்றும் விஷ்ணு பிரியா சஞ்சய் பிலிம்ஸ் சார்பில் ஹேம சூர்யா, சஞ்சய் பாபு & ஜூலி, தனசேகரன் இணைந்து அதிக பொருட்செலவில் பாட்டி பேரன் உறவை உணர்வுபூர்வமாகவும் காமெடி, காதல் கலந்தும் காட்சிபடுத்துகிற படமாக ‘பாட்டி சொல்லை தட்டாதே’ படத்தை உருவாக்கியுள்ளனர்.

உருவாக்கத்தில் உறுதுணை:-
ஒளிப்பதிவு – கே.எஸ்.செல்வராஜ்
வசனம் – சுகுணகுமார்
இசை – விஜய் சங்கர்
எடிட்டிங் – சசிகுமார், கலை -மணிமாறன்
நடனம் – சங்கர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here