அந்த இரு குழந்தைகளும் வளர வளர, தங்கள் தந்தையைப் போலவே நெருங்கிய நண்பர்களாக வலம்வருகிறார்கள். ஊரில் அவர்கள் விளையாட்டுத்தனமாக சில விஷயங்களில் ஈடுபட அவை சிலருக்கு தவம் செய்து கிடைத்த வரமாகவும் சிலருக்கு தலைவலி தருவதாகவும் இருக்கிறது. சிறுவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் அப்பாக்கள் மீது சீறிப்பாய, அந்த அப்பாக்கள் சிறுவர்களுக்கு கடுமையான தண்டனை தருகிறார்கள். அதிலிருந்து அவர்கள் மீண்டுவர முயற்சிக்கும்போது ஏற்படும் தடைகள், சவால்கள் என நகரும் கதையின்போக்கு முழுக்க முழுக்க சுவாரஸ்யம்.
குழந்தைகளுக்கான திரைப்படங்கள் வருவது அரிதாகிப்போன சூழலில், அவர்களுக்குப் பிடித்த அனிமேஷன் வடிவத்தில் சிரிக்கவும் சிந்திக்கவுமான படத்தை இயக்கிய சிறுமி பி கே அகஸ்தி, வசனம் பாடல்களை எழுதிய அரங்கன் சின்னத்தம்பி, படத்தை தயாரித்த அகஸ்தியின் தந்தை கார்த்திகேயன் உள்ளிட்ட அத்தனைப் பேரும் பாராட்டுக்குரியவர்கள்.